மீலாது நபி விழா அழைப்பிதல்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் !!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.....)
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.....)
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, இறை நம்பிக்கையாளர்களே !!நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள் !!! (அல் குர் ஆன் 33:56)
பேரன்புடையீர்,
இன்ஷா அல்லாஹ் நிகழும் ஹிஜ்ரி 1429 ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை 14 சனிக்கிழமை 22.03.2008 அன்று பிற்பகல் சரியாக 15.00 மணிக்கு நமதுச்சங்க வளாகத்தில் மீலாது நபி விழா நடைப்பெற உள்ளது. அது சமயம் நமது குழந்தைகளின் குர்ஆன் கிஃராத்தும், மார்க்க அறிஞர்களின் சிறப்புச் சொற்பொழிவும் அதனைத் தொடர்ந்து நடைப்பெறவிருக்கும் விருந்து உபசரிப்பிலும் தாங்கள் அனைவர்களும் குடும்பத்தினர்களுடன் கலந்துக்கொண்டு இவ்விழாவை சிறப்பித்துத் தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்று காலை 10.00 மணிக்கு நமதுச்சங்க வளாகத்தில் மௌலூது ஓதப்படும், அதில் தாங்கள் அனைவர்களும் கலந்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு,
நிர்வாகிகள்.